காமன்வெல்த்மாநாட்டை இலங்கையில்நடத்தாதே-IND-ENGஅலுவலகங்கள்முற்றுகை

- in பரப்புரை
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே,காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு, தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்திய-இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகைப் போராட்டம் மே 17 இயக்கம் சார்பில்(25-10-2013) ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தோழர்கள் கல்ந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 

முற்றுகைப் போராட்டத்தின் போது காமன்வெல்த் அமைப்பின் கொடி தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியின் தலைவர் அய்யா பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தோழர் சைதை சிவா,மனித நேய மக்கள் கட்சியின் தோழர் அனிஸ், SDPI கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் அம்சா, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் தபசி குமரன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, இன அழிப்புக்கு எதிரான இசுலாமியர் இயக்கம், மக்கள் விடுதலை இயக்கம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், உயிர்த் துளிகள் இயக்கம், தமிழ்த் தேச குடியரசு இயக்கம் ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.



Leave a Reply