ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம் – படங்கள்

- in பரப்புரை
ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம்

  • இனப்படுகொலையில் நேரடியாக பங்கெடுத்த ஐநா அதிகாரிகளை தண்டிக்க கோரியும், 
  • இனபடுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரியும் 
  • தமிழீழத்திற்க்கான பொது வாக்கெடுப்பை கோரியும் 

ஐநா அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டம் மே பதினேழு இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது

ஐநா அலுவலகம் முற்றுகை – சென்னை  – 12-2-2014

சென்னை அடையாரில் உள்ள யுனிசெப் ஐநா அலுவலகம் முற்றுகை இடப்பட்டது. பல்வேறு கட்சிகள், இயக்கங்களை சார்ந்த தோழர்களும், உணர்வாளர்களும் ஒன்றிணைந்து இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


ஐநா அலுவலகம் முற்றுகை – டெல்லி – 14-02-2014 

இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரனைகோரியும், பொதுவாக்கெடுப்பை உடனே நடத்துவேண்டியும், இனப்படுகொலைக்கு துணைபோன ஐ.நா அதிகாரிகளை தண்டிக்கக் கோரியும் மே 17 இயக்கம் SDPI,SIKH YOUTH FORM ஆகியவை இணைந்து நடத்திய முற்றுகைப் போராட்டம் டெல்லியில் நடந்தது.பின்னர் ஐ.நா அலுவலகத்தில் மனுக்கொடுக்கப்பட்டது.

ஐநா அலுவலகம் முற்றுகை – மும்பை –  12-02-2014

மும்பையில் விழுத்தெழு இளைஞர் இயக்கம் ஒருங்கிணைத்த ஐநா அலுவலக முற்றுகை போராட்டம் 12.02.14அன்று நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் அந்தேரி தமிழ் சங்கம், தமிழின இளைஞர் இயக்கம் – நேருநகர், விலே பர்லே, விடுதலை சிறுத்தைகள் கட்சி – செம்பூர் பகுதி;
உலகத் தமிழர் பேரமைப்பு – மலாடு பகுதி, மதிமுக – காட்கோபர் பகுதி,
நாம் தமிழர் கட்சி – செம்பூர் பகுதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் கலந்துகொண்டனர்.

இறுதியாக மனு கொடுக்க சென்ற விழுத்தெழு இயக்கத்தை சேர்ந்த

தோழர் சிரிதரன் துரைசிந்தரத்தை காவல்துறை திடிரென்று கைது செய்து விசாரித்தனர்.பின் விடுதலை செய்யப்பட்டார்.


ஐநா அலுவலகம் முற்றுகை – பெங்களுரு 

ஐநா அலுவலகம் முற்றுகை – 12-2-2014 – நியூ யார்க், அமெரிக்கா 

இலங்கையில் நடந்தது போர்குற்றம் மட்டும் அல்ல திட்டமிட்ட இனபடுகொலை. நியூயார்க் ஐ நா தலைமை செயலகம் மற்றும் ஐ நா பாதுகாப்பு கவுன்சில் (விஜய் நம்பியார் ) அலுவலகம் முன்னே மே17 மற்றும் இன உணர்வாளர்கள் போராட்டம்

பிப்ரவரி 12 முருகதாசன் நினைவுநாளில் தமிழின படுகொலைக்கு துணை போன ஐ நா மற்றும் அதன் பிரதிநிதிகளை கண்டித்து மற்றும் ஒரு இனபடுகொலையை சாதாரணமாக போர்குற்றம் என்ற சிறு வட்டத்தில் சுருக்கி தனி ஈழ கோரிக்கையை நீர்த்து போக செய்யும் ஐ நாவின் அய்யோகியதனத்தை கண்டித்து உலகம் முழுவதும் மே 17 இயக்கம் ஐ நா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்தது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ நா தலைமை செயலகத்தை நம் தோழர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் கடும் குளிர் மற்றும் உறை பணியை பொருட்படுத்தாமல் காலை 10 மணி முதலே முற்றுகையிட ஆரம்பித்தனர்.

USTPAC, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், மே 17,நாம் தமிழர் மற்றும் பல தமிழின உணர்வாளர்கள் பலர் இம்முற்றுகை போராட்டத்தில் பங்கு பெற்றனர்.”We want referendum, We want Tamil Eelam” என்ற நமது கோரிக்கையை விண்ணை தொட முழுக்க மிட ஏற்கனவே அங்கு இருந்த திபெத்,மற்றும் ஆப்ரிக்க இளைஞர்கள் ஆதரவு கொடுத்து உற்சாக படுத்தினர்.ஈழ விடயத்தில் ஐ ந வின் துரோகத்தை வெளியிட்ட Pertrie ரிப்போர்ட், Inner city pressன் ஊடகவியலாளர் Matthew Russell Lee நம் போராட்டத்திற்கு வந்தது நம்மை உற்சாகத்தில் ஆழ்த்தியது.அவரிடம் நம்முடைய கோரிக்கைகள் மற்றும் மே 17 இயக்கத்தின் அறிக்கை கையளிக்கப்பட்டது.

“இலங்கையில் நடைபெற்ற இனபடுகொலையை வெறும் போர்குற்றம் என்று ஒரு குறுகிய வட்டத்தில் அடைப்பதை விட அது ஒரு இன படுகொலை என்பதை பதிவு செய்து அதற்க்கு இலங்கையில் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் மக்களிடயே தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தவேண்டும்” என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு உருத்திர குமாரன் கூறினார்.
பிறகு நம் தோழர்கள் அருகாமையில் அமைந்துள்ள ஐ நா பாதுகாப்பு தலைமை அலுவலகமான விஜய் நம்பியாரின் அலுவகதையும் முற்றுகையிட்டனர்.

ஐநா அலுவலகம் முற்றுகை – சிட்னி, ஆஸ்திரேலியா 


Leave a Reply