மீத்தேன் ஆவணப்பட திரையிடல் நிகழ்வு – திருப்பூர்

- in பரப்புரை
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைத்த… மே பதினேழு இயக்கத்தின் சார்பில் வெளிவந்துள்ள பாலைவனமாகும் காவிரி டெல்டா-மீத்தேன் ஆவணப்படத்தின் அறிமுகம் மற்றும் திரையிடல் நிகழ்வு திருப்பூர் குமரன் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் அரோமா அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது…

இயற்கை வாழ்வக ஐயா க,இரா,முத்துச்சாமி அவர்கள் வெளியிட கொங்குமண் பத்திரிக்கையின் ஆசிரியர் பழ,ரகுபதி பெற்றுக் கொண்டார்… 

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, வழக்கறிஞர் உமர்கயான் ஆகியோர் கருத்துரையாற்றினர். 

ஆவணப்படத்தைப் பற்றி இளஞாயிறு, எழுத்தாளர் Shahan Noor, SDPI கட்சியின் தோழர் முஜிபுர் ரஹ்மான், தோழர்.அருணாச்சலம், ஐயா க.இரா.முத்துச்சாமி, இயற்கை கீரை அமைப்பைச் சார்ந்த கூத்தன், இன்னும் பல தோழர்கள் உரை நிகழ்த்தினர்,

நிறைவாக ஆவணப்பட இயக்குனர் சரவணன் தங்கப்பா ஏற்புரை வழங்கினார்…

திருப்பூர் இணையதள நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த நண்பர்கள், பல்வேறு அமைப்பைச் சார்ந்த தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…

குறிப்பாக இந்த நிகழ்விற்கு பெரிதும் உதவியாக இருந்த பதியம் Bharathi Vasan திருப்பூர் இணையதள நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளஞாயிறு அறிவர் ஆகியோருக்கு நன்றிகள் பல பல…. 

அரங்கமே நிறைந்து வழிந்த இந்த நிகழ்வின் வெற்றிக்கு வந்திருந்தவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் வாய்ந்தது.


Leave a Reply