மொழிப்போர் தியாகிகள் – மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம் – சென்னை

- in பரப்புரை
24-1-2015 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை வில்லிவாக்கத்தில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

நிகழ்வு பறையிசையோடும் தோழர் சமர்ப்பா குழுவினரின் இன எழுச்சி பாடல்களோடும் தொடங்கப்பட்டது. மாவீரன் முத்துக்குமார் மற்றும் மொழிப்போர் தியாகிகள் நினைவாக நடுகல் அமைக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கவிஞர் இன்குலாப், தோழர் கி.தா பச்சையப்பன் – மொழிப்போராளி, தோழர் அரங்க குணசேகரன் – தமிழக மக்கள் புரட்சி கழகம், தோழர் தபசி குமரன் – திராவிடர் விடுதலை கழகம், தோழர் குமரன் – தந்தை பெரியார் திராவிடர் கழகம், தோழர் சுந்தரமூர்த்தி தமிழர் விடுதலை கழகம், மாவீரன் முத்துக்குமாரின் தந்தையார் தோழர் குமரேசன், மே பதினேழு இயக்கத் தோழர்கள் லேனா குமார் மற்றும் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர். ஏராளமான பொது மக்களும், உணர்வாளர்களும் தோழமை இயக்கத்தினரும் கலந்துகொண்டு இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் உயிர்நீத்த ஈகியர்களையும் மாவீரன் முத்துக்குமாரையும் நினைவேந்தினர்.


Leave a Reply