நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம்

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தலைவர் வைகோ அவர்களின் ஒருங்கிணைப்பில் பல்வேறு தலைவர்களும் கலந்து கொள்ளும் நாசகார நியூட்ரினோ திட்டத்தை நிறுத்த வலியுறுத்தி நடைபெற்றுவரும் ஒரு நாள் உண்ணாவிரதத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் அவரளின் உரையின் சுருக்கம்.
இந்த நீயூட்ரினோ திட்டத்தை தமிழகத்தின் மீது திணிக்கும் பாஜகாவின் மோடி அரசுக்கு ஒன்றை எச்சரிக்கையாக சொல்கின்றோம்.இந்தியாவின் பார்பனியத்தின் ஆட்சியை உங்களின் பண்பாட்டை இரண்டாயிரம் வருடங்களாக எதிர்த்து நின்று போரிட்ட இனம் தமிழனம்.ஒரு போதும் நாங்கள் வீழ்ந்து விட மாட்டோம்.
நீங்கள் யாழ்ப்பாண பல்கழைகழகத்தில் இந்தியில் பேசுங்கள் இல்லை தமிழக மீனவர்கள் குறித்து பேசாமல் போங்கள் ஆனால் உங்களின் தோல்வியை தமிழர்கள் முடிவு செய்துவிட்டார்கள்..
இந்தியத்தின் வீழ்ச்சியை தமிழகம் முடிவு செய்யும்
பாரதிய ஜனதா கட்சியின் திமிரை தமிழர்கள் ஒழித்து கட்டுவார்கள்.இதை உறுதிமொழியாக ஏற்று இந்த உண்ணாவிரத பந்தலில் இருக்கிறோம்

Leave a Reply